ஆண்டுதோறும் தென்னாட்டில் மக்களுக்கிடையே கொதிப்பையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்கும் ஒரு நிரந்தர பிரச்சனையாக ஆகிவிட்டது காவிரி. ஏழு புண்ணிய நதிகளில் ஒன்றாகிய காவிரி இன்று மக்களை பாவம் செய்ய தூண்டும் காரணியாகிவிட்டதை எண்ணும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. பரஸ்பரம் மக்களுக்கிடையே நம்பிக்கையின்மையும், விட்டுக்கொடுக்காத நிலையும், அறியாமையுள் உழலும் சமூகமும், அவற்றை தங்கள் குறுகிய கால அறுவடைக்கு அரசியல் மடமையும் சேர்ந்து காவிரி என்றில்லை அனைத்து இந்திய பிரச்சனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன.
காவிரி குடகு மலையில் தோன்றியது முதல் வங்கக் கடலில் சங்கமிக்கும் வரை தான் பாயும் நிலப்பகுதி அனைத்திற்கும் வளம் கொழித்து மக்களை இன்பக்கடலில் மூழ்கடித்து செல்கிறது. ஆண்டுமுழுவதும் வற்றாத ஜீவநதி என்ற பெயர் எடுத்திருந்தாலும் மழை பொய்த்தால் தானும் பொய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டாள் காவிரி. இயற்கையை மனிதன் சுரண்டி பிழைக்கும் நிலையே இதற்கு காரணம் எனலாம். இப்படி முறை கடந்து நாம் செய்த அட்டூழியங்களே இன்று காவிரி வற்றி நமக்கு சொல்லொணா துயரத்தையும் அண்டை அயலாரிடம் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் சம்பந்தப்பட்ட அனைவருமே நேர்மை இன்றி செயல் பட்டிருக்கிறார்கள். கர்நாடகம், தமிழகம், மத்திய அரசு இவர்களோடு நீதிமன்றமும் தங்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்யாமல் மக்கள் நலனில் சிறிது அக்கறை இன்றி பிரச்னையை பூதாகரமாக்கி இருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் காவிரி பிரச்சனை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் காவிரி பிரச்சனை தலை தூக்குவது ஜூன் ஜூலை மாதங்களில் மட்டுமே. தென்மேற்கு பருவ மழை கர்நாடகத்தில் சரிவர பெய்தால் இந்த மாதங்களில் கூட இது தென்படாது. கடந்த சில ஆண்டுகளில் நல்ல மழை பெய்த காரணத்தினால் அமுங்கி கிடந்த பிரச்சனை இந்தாண்டு பருவ மழை பொய்த்ததினால் தலை தூக்கி இருக்கிறது. இரு தரப்பும் ஏதோ பிரச்சனை மற்றவரால் மட்டுமே நிகழ்கிறது, தாங்கள் மிகவும் யோக்கியர்கள் என்பது போல நடந்து கொள்கிறார்கள். ஆள்பவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் பிரச்னையை அணுகும் முறை ஒன்றாகத்தான் இருக்கிறது.
கர்நாடகம்:
தமிழகம்:
மத்திய அரசு:
மத்திய அரசு தமது வலிமையை இழந்து விட்டது. தனது சொல்லையோ அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ ஏற்காத அரசுகளை வழிக்கு கொண்டுவரும் சாமர்த்தியமும் பலமும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. முன்பு வாக்கு வங்கிக்காக மெளனமாக இருந்த மத்திய அரசுகள் இப்போது வாக்குகளை பெற இயலாத நிலையால் தமத்து வலிமையை இழந்து விட்டன.மாநில கட்சிகள் என்றில்லை தேசிய கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. மேடையில் மட்டுமே முழங்க இவர்களால் முடியும்.
உச்ச நீதிமன்றம்:
தீர்ப்பை சொல்லவேண்டிய மன்றங்கள் சமாதானம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. தமது தீர்ப்பை நடைமுறை படுத்தும் வலிமை அற்று நிற்கின்றன. எங்கே தமது தலையில் வம்பு வந்து விழுமோ என்று மத்திய அரசிடம் அவ்வப்போது பொறுப்பை தள்ளிவிட்டு தப்பிக்கபார்கின்றன தமது தீர்ப்பை நடைமுறை படுத்தாத மாநில அரசை கலைக்க சொல்லும் வலிமை கூட இல்லாமல் வேடிக்கை பார்ப்பது பரிதாபம். இந்த கூத்தில் நமது அடிப்படை உரிமையின் காவலன் என்ற பட்டப்பெயர்களை வேறு இவை சுமந்து கொண்டுள்ளன. நம் அடிப்படையே தரும்போது இவை வாய்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன.
இப்படி பொறுப்பாக இருக்க வேண்டிய அனைவரும் பொறுப்பில்லாமலோ அல்லது வலிமை இல்லாமலோ இருக்குபோது காவிரி நீருக்கு என்னதான் தீர்வு. நமக்கு தெரிந்து கீழ்கண்டவை மட்டுமே தீர்வாக அமைய முடியும்!
உடனடி தீர்வுகள்!
1. கர்நாடக அரசை கலைத்துவிட்டு ராணுவ உதவியுடன் மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் நீர் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு அங்கே வாழும் லட்ச்சக்கணக்கான தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். இது விவேகமான முடிவு அல்ல.
2. இயற்கை அன்னை கண்ணைத்திறந்து பார்க்கவேண்டும். அடைமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டால் இந்த கவலை உடனே மறக்கப்பட்டுவிடும், அல்லது அடுத்த வறட்சி வரை தள்ளிவைக்கப்படும்.
நீண்டக் கால தீர்வுகள்!
1. காவிரி நீர் பாசனப்பகுதிகளை பெரிதாக்க வேண்டும். இதுவரை காவிரி நீரை பார்த்திராத பகுதிகளுக்கும் நீரை கொண்டு செல்லவேண்டும். பொதுவாக ஆண்டிற்கு இரண்டுமுறை ஏற்படும் வெள்ளப்பெருக்கை இந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் ஆண்டுமுழுவதும் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.
2. பாலாறு முதல் வைகை வரை உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நதிகளை இணைத்து காவிரி வெள்ளத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்கலாம்.
3. புதிய நகர்புற பகுதிகளுக்கு காவிரி வெள்ள நீரை குடிநீராக பயன் படுத்தலாம். இதற்கென அந்த நகரங்களுக்கு அருகில் உள்ள ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி காவிரி நீரை கொண்டு நிரப்ப வேண்டும்.
4. காவிரியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி மிகை நீரை சேமிக்கலாம்.
இந்த தீர்வுகள் அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அருகில் இருக்கும் மாநிலங்களுடன் சுமூக உறவை நிலை நாடும்.
தடாலடி தீர்வு:
இவையல்லாமல் வேறு ஒரு சிறந்த தீர்வும் உள்ளது. காவிரி பாயும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும். குடகு முதல் திருவாரூர் வரை உள்ள அனைத்து காவிரி பாசன பகுதிகளும் இந்த மாநிலத்தில் இடம் பெற வேண்டும். இந்த மாநிலத்து மக்கள் தங்களுக்குள் ஒரு சுமூக வழியை பின்பற்றிட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த பிரச்சனை குறைந்த பட்சம் மக்களை தமிழன் கன்னடன் ஏறாவது பிரிக்காமல் இருக்கும். 1991 இல் கர்நாடகாவில் காவிரிக்காக பதற்றம் நேர்ந்தபொழுது பெங்களூருவில் பெரும் பாதிப்பை சந்தித்த தமிழர்களுள் பெரும்பாலோர் காட்பாடி மற்றும் வேலூர் பகுதிகளை சார்ந்தவர்கள். இந்த பகுதிகள் காவிரி நீரை குடிக்கவோ அல்லது விவசாய பாசனத்திற்கோ பயன்படுத்துவதில்லை. யாரோ பயன்பெறும் காவிரி நீருக்காக சம்பந்தம் இல்லாத இவர்கள் தமிழன் என்ற ஒரே காரணத்திர்க்காக பாதிப்படைந்தார்கள். காவிரி மாநிலம் உருவானால் குறைந்தது வேலூர் தமிழனாவது பாதிப்பில்லாமல் இருப்பான்!
மத்திய அரசு தமது வலிமையை இழந்து விட்டது. தனது சொல்லையோ அல்லது உச்ச நீதிமன்ற தீர்ப்பையோ ஏற்காத அரசுகளை வழிக்கு கொண்டுவரும் சாமர்த்தியமும் பலமும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. முன்பு வாக்கு வங்கிக்காக மெளனமாக இருந்த மத்திய அரசுகள் இப்போது வாக்குகளை பெற இயலாத நிலையால் தமத்து வலிமையை இழந்து விட்டன.மாநில கட்சிகள் என்றில்லை தேசிய கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகி விட்டது. மேடையில் மட்டுமே முழங்க இவர்களால் முடியும்.
உச்ச நீதிமன்றம்:
தீர்ப்பை சொல்லவேண்டிய மன்றங்கள் சமாதானம் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. தமது தீர்ப்பை நடைமுறை படுத்தும் வலிமை அற்று நிற்கின்றன. எங்கே தமது தலையில் வம்பு வந்து விழுமோ என்று மத்திய அரசிடம் அவ்வப்போது பொறுப்பை தள்ளிவிட்டு தப்பிக்கபார்கின்றன தமது தீர்ப்பை நடைமுறை படுத்தாத மாநில அரசை கலைக்க சொல்லும் வலிமை கூட இல்லாமல் வேடிக்கை பார்ப்பது பரிதாபம். இந்த கூத்தில் நமது அடிப்படை உரிமையின் காவலன் என்ற பட்டப்பெயர்களை வேறு இவை சுமந்து கொண்டுள்ளன. நம் அடிப்படையே தரும்போது இவை வாய்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கின்றன.
இப்படி பொறுப்பாக இருக்க வேண்டிய அனைவரும் பொறுப்பில்லாமலோ அல்லது வலிமை இல்லாமலோ இருக்குபோது காவிரி நீருக்கு என்னதான் தீர்வு. நமக்கு தெரிந்து கீழ்கண்டவை மட்டுமே தீர்வாக அமைய முடியும்!
உடனடி தீர்வுகள்!
1. கர்நாடக அரசை கலைத்துவிட்டு ராணுவ உதவியுடன் மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தவேண்டும். இவ்வாறு செய்தால் நீர் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு அங்கே வாழும் லட்ச்சக்கணக்கான தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். இது விவேகமான முடிவு அல்ல.
2. இயற்கை அன்னை கண்ணைத்திறந்து பார்க்கவேண்டும். அடைமழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டால் இந்த கவலை உடனே மறக்கப்பட்டுவிடும், அல்லது அடுத்த வறட்சி வரை தள்ளிவைக்கப்படும்.
நீண்டக் கால தீர்வுகள்!
1. காவிரி நீர் பாசனப்பகுதிகளை பெரிதாக்க வேண்டும். இதுவரை காவிரி நீரை பார்த்திராத பகுதிகளுக்கும் நீரை கொண்டு செல்லவேண்டும். பொதுவாக ஆண்டிற்கு இரண்டுமுறை ஏற்படும் வெள்ளப்பெருக்கை இந்த பகுதிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் ஆண்டுமுழுவதும் நிலத்தடி நீரை சேமிக்க முடியும்.
2. பாலாறு முதல் வைகை வரை உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய நதிகளை இணைத்து காவிரி வெள்ளத்தை தமிழகம் முழுவதும் பரவலாக்கலாம்.
3. புதிய நகர்புற பகுதிகளுக்கு காவிரி வெள்ள நீரை குடிநீராக பயன் படுத்தலாம். இதற்கென அந்த நகரங்களுக்கு அருகில் உள்ள ஏரி, குளம் மற்றும் நீர் நிலைகளை தூர்வாரி ஆழப்படுத்தி காவிரி நீரை கொண்டு நிரப்ப வேண்டும்.
4. காவிரியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகளை ஏற்படுத்தி மிகை நீரை சேமிக்கலாம்.
இந்த தீர்வுகள் அனைத்து பிரிவினருக்கும் ஏற்புடையதாக இருக்கும். அருகில் இருக்கும் மாநிலங்களுடன் சுமூக உறவை நிலை நாடும்.
தடாலடி தீர்வு: