ராஜபக்ஷே இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும்படி எந்த ஒரு சிறப்பான செயலையும் செய்துவிடவில்லை. ஆனால் அதற்கு மாறாக இந்திய துணைக்கண்டத்திற்கும், இந்தியமக்கள், குறிப்பாக தமிழக மக்களுக்கும் தீமை தரும் பல நிகழ்வுகளை செய்து காட்டியுள்ள ஒரு மிகச் சிறந்த கயவன். கயவன் என்ற சொல் கூட தம்மை நொந்துக் கொள்ளும்படியான கிழமை படைத்தவன் இந்த பெரிய மனிதன். இத்தகைய ஒருவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோருபவன் எத்தகைய கோணல் மனம் படைத்தவன் என்பதை நாகரீக மனிதர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

கடந்த காங்கிரசு அரசும் சரி, இப்போதைய மோடி அரசும் சரி பலமுறை வற்புறுத்தியும் 13A அரசியல் சட்ட திருத்தத்தை இன்றுவரை கொண்டுவராத ஒரு பெருந்தகையாளன் இந்த ராஜபக்ஷே.
இந்திய நாட்டின் நலத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட பாகிஸ்தானுடன் ராணுவ மற்றும் வெளியுறவு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டு இந்திய அரசிற்கு ஏளன பார்வையை பரிசளித்தவன் இந்த ராஜபக்ஷே.
இலங்கையின் ராணுவ வலைதளத்தில் தமிழக முதலவர் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதுவதை கொச்சைப் படுத்தி ஏளன சித்திரம் வரைந்த கீழ்மக்களின் அதிபர் இந்த ராஜபக்ஷே.
இப்படி பாரத ரத்னா விருதிற்கு சிறிதும் பொருத்தமில்லாத ராஜபக்ஷேவை அவ்விருதிற்கு சிபாரிசு செய்யும் சுப்ரமணிய சுவாமியை பாரதிய ஜனதா கட்சி கண்டிக்க வேண்டும். அல்லது இந்த விஷயத்தில் தங்களின் நிலைப் பாட்டை தெளிவாக்க வேண்டும். இதை விடுத்து சு.சுவாமி செய்யும் சேட்டைகளை வழக்கம் போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது மனக்கசப்பை மட்டுமே உருவாக்கும். இதற்குப் பதிலாக பாரத ரத்னா விருதை இந்திய விரோத போக்கை ராஜபக்ஷே போல் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாகவே கடைபிடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு வழங்கி விடலாம்.
ராஜபக்சேவுக்கு பா.ர. கொடுக்க திடீர் என்று சிபாரிசு செய்ய வேண்டிய என்ன? அவர் கூறும் காரணமான விடுதலைப் புலிகளை அழிப்பு நிகழ்ந்தது 2009 இல். ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஞானம் வந்ததா? இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப்படி ராஜபக்ஷேவை போற்றி வைத்தால் தமிழகத்தில் உள்ள மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சு.சுவாமி வீட்டின் எதிரில் ஆர்பாட்டம் செய்வார்கள் என்ற எதிர் பார்ப்பு சு.சுவாமிக்கு இருக்கலாம். அங்கே தப்பித் தவறி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறி தமிழக ஆட்சியை கவிழ்க்கலாம், அல்லது ஜெயலலிதாதான் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்று உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரலாம் என்ற கோரமான புத்தியாக கூட இருக்கலாம். யார்தான் அறிவர் அற்பர்களின் அடுத்த அசைவை...!!
ராஜபக்சேவுக்கு பா.ர. கொடுக்க திடீர் என்று சிபாரிசு செய்ய வேண்டிய என்ன? அவர் கூறும் காரணமான விடுதலைப் புலிகளை அழிப்பு நிகழ்ந்தது 2009 இல். ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஞானம் வந்ததா? இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப்படி ராஜபக்ஷேவை போற்றி வைத்தால் தமிழகத்தில் உள்ள மக்கள் உணர்ச்சி வசப்பட்டு சு.சுவாமி வீட்டின் எதிரில் ஆர்பாட்டம் செய்வார்கள் என்ற எதிர் பார்ப்பு சு.சுவாமிக்கு இருக்கலாம். அங்கே தப்பித் தவறி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதையே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கூறி தமிழக ஆட்சியை கவிழ்க்கலாம், அல்லது ஜெயலலிதாதான் இதில் ஈடுபட்டிருக்கிறார் என்று உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு அவருடைய ஜாமீனை ரத்து செய்ய கோரலாம் என்ற கோரமான புத்தியாக கூட இருக்கலாம். யார்தான் அறிவர் அற்பர்களின் அடுத்த அசைவை...!!